உன்னுடனான இருபது வருட வாழ்க்கை ...
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் ...
காதலும் மோதலும் ஊடலும் கூடலும் ...
கனவுகளும் கற்பனைகளும் நிஜங்களும் நிழல்களும்…
மேகங்களும் மழைகளும் இடிகளும் மின்னல்களும் …
இரவும் பகலும் நிலவும் சூரியனும்…
கோவில்களும் பிரார்த்தனைகளும் ஆசிகளும் ஆறுதல்களும் ...
பிரச்சனைகளும் தீர்வுகளும் சர்ச்சைகளும் தீர்மானங்களும் ...
காயங்களும் மருந்துகளும் மாயங்களும் மந்திரங்களும் ...
இன்னும் பல ஆண்டுகள் இவை அனைத்தும் தொடரவும்…
நம் பரஸ்பர அன்பு இன்னும் மெருகேறவும்...
ஐஸ்வர்யமும் தீக்ஷண்யமும் பல்கி பெருகவும் ...
கடவுளாகி விட்ட நம் முன்னோர்கள் யாவரையும்
வணங்கி வேண்டி ...
உன்னை எனக்களித்த இறைவனுக்கும்
நம் பெற்றோருக்கும் நம் பிள்ளைகளுக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்...
அன்பு சூழ் இவ்வுலகில்
என்னை சூழ்ந்த உன் அன்பு மட்டுமே நிரந்தரம்
என உணர்ந்த என் மனமார்ந்த நன்றிகள் !

No comments:
Post a Comment